அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Friday, 23 August 2013

பத்துமாசம் என்ன சுமந்த

பத்துமாசம் என்ன சுமந்த
பத்தரமாத்து தங்கம் நீயும்...
பட்டபாடு நானறிவேன் - உன்
பாசம்பாத்தா அணையும் தீயும்..

பாராட்டி சீராட்டி
பாசம்காட்டி வளத்துப்புட்ட..
பாடையில போறவரை
பாவிமனம் மறக்காதம்மா..

ஊரே கும்பிடுபோடும்
உத்தியோகம் பாக்குறவ..
வீட்டுக்குள்ள நீ எனக்கு
பாத்துபாத்து எல்லாம் செய்வ..

உசந்தபடிப்பு நான் படிக்க
ஊரவிட்டு அனுப்பி வெச்ச..
உலகமெங்கும் சுத்துனாலும்
உறங்கதம்மா உன் நினைப்பு..

உன்னபோல மக வேணும்
உன்ன கொஞ்சம் சுமப்பதுக்கு...
உன் பாசத்துல பாதிபோதும்
என் பொஞ்சாதியா வாறதுக்கு...

உன்ன பேச வார்த்தயில்ல
உன் பாசம்பேச கவிதயில்ல
என்ன பெத்தமனம் பித்து இல்ல
உன் ஒத்தபுள்ள மனமும் கல்லு இல்ல..

என் அம்மா.. இது உனக்கு..

No comments:

Post a Comment