அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Friday, 23 August 2013

உன் மடியில் தலைவைத்து உறங்கும் சுகம் !

நீ உண்ணும் பொழுது ஒரு வாய் ஊட்டிவிட சொல்லி உன் எச்சிலை

சாப்பிடும் சுகம் !

தினமும் காலை உன்னிடம் திட்டுக்கள் வாங்கிவிட்டு பள்ளி செல்லும் சுகம் !

மாலை வீடு திரும்பியதும் ஒன்றுமே நடக்காதது போல் என் தலையை

வருடிக் கொடுக்கும் சுகம் !

நான் தூங்கி விட்டேன் என்று எண்ணி என் நெற்றியில் நீ முத்தம்

கொடுக்கும் சுகம் !

இது அனைத்தையும் இன்று வரை எண்ணி எண்ணி ஆனந்தம்

அடைகிறேன்  திரும்பவும் அந்த சுகம் கிடைக்காதே என் தாயிடம் இருந்து

#ஏழு கழுதை வயசாச்சு இன்னும் பிள்ளைய கொஞ்சிகிட்டு இருக்கனு யாரு

சொன்னாலும் என் பிள்ளை கிழவி ஆனாலும் எனக்கு அவள் குழந்தைதான்

என்று சொல்லி என்னை தன் வாழ்நாள் முழுக்க சுமந்திருந்த உன்னை

கடைசி காலம் வரை சுகமாக சுமக்க வேண்டும் என்று எண்ணிய என்

எண்ணமெல்லாம் உன்னோடே புதைகுழியில் போய்விட்டதே அம்மா

No comments:

Post a Comment